ஆப்நகரம்

ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் ஏப்பம்விட்டவர் தலைமறைவு!!

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி வந்த நபர், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை தராமல் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Aug 2020, 9:20 pm
திருப்பூரில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு ஆகியவை நடத்தி 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Samayam Tamil tiruppur


திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் அப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக ஏலச் சீட்டு, பள்ளி சீட்டு, பண்டு சீட்டு, தீபாவளி சீட்டு என பலவிதமான சீட்டுகள் நடத்தி வந்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவரிடம் சீட்டு சேர்ந்துள்ளனர்.

தவணைத் தொகைகளை சரியாக செலுத்தி வந்த நிலையில், சீட்டு முடிந்து ஒரு மாத காலமாகியும் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து வீட்டிற்கு கேட்கச் சென்றபோது அவர் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

கடத்தலைப் பார்த்த இளம்பெண்ணைச் சுட்டுக் கொன்ற சந்தன காளியப்பன்!

இதனையடுத்து அவரை கண்டுபிடித்து உடனடியாக தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அப்பகுதியில் சுமார் 2.000 பேர் வரை சீட்டு சேர்ந்துள்ளதாகவும், 2 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்

அடுத்த செய்தி