ஆப்நகரம்

அடகுவைத்த கடையிலேயே ஆட்டையப் போட்ட அரிவாள் ஆசாமி!

திருப்பூர் அடகு கடையில் அரிவாள் காட்டி மிரட்டி பணம், நகையைப் பறித்த நபர் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 23 May 2020, 12:06 pm
திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள பிரபல நகை அடகு கடையில் இரண்டு தினங்களுக்கு முன் துணிகர நகைப் பறிப்புச் சம்பவம் நடைபெற்றது.
Samayam Tamil snatched money and jewelery in tripur pawn shop


மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி குமரன் சாலை. இங்கு வடக்கு காவல் நிலையம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவையும் அமைந்துள்ளன. இந்த பகுதியில் அமைந்துள்ள பிரபல நகை அடகுக் கடையில் இரு தினங்களுக்கு முன் ஹெல்மட் அணிந்தபடி மர்ம நபர் உள்ளே நுழைந்தார்.

அதன்பின் அவர் மறைத்து வைத்த அரிவாளை எடுத்து ஊழியர்களை மிரட்டியுள்ளார். பின் கடையில் இருந்த 10 சவரன் நகை, 20,000 ரூபாய் ரொக்கம் ஆகியவையை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்!

இந்தக் காட்சிகளை காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மர்ம நபர் குறித்து தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுவேல் என்பது தெரியவந்துள்ளது. அந்த நகைகளை இந்த கடையில் அடகு வைத்துள்ளார்.

தற்போது போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி