ஆப்நகரம்

சொந்த காரிலே கடத்தி அடி, உதை: மீண்டும் வீட்டிலே இறக்கிவிட்டுச் சென்ற நல்லவர்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் காருக்கு சொந்தக்காரரை அதே வாகனத்தில் கடத்தி அடி உதை கொடுத்து, அவர்களை காரிலேயே மீண்டும் கொண்டு சென்று இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Sep 2021, 12:28 pm
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கங்கவர் வீதியில் வசிப்பவர் விக்னேஷ் (23). இவர் சேயூர் தண்டுக்காரன் பாளையம் பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமியை (21), கடந்த சில நாட்களுக்கு முன், விஜயலட்சுமியின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். விக்னேஷின் மாமா, ரகுநாதன் (35) என்பவர், போலீசார் முன்னிலையில், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
Samayam Tamil சொந்த காரிலே கடத்தி அடி, உதை: மீண்டும் வீட்டிலே இறக்கிவிட்டுச் சென்ற நல்லவர்கள்!


இந்நிலையில், ரகுநாதனை சேயூரில் வைத்து விஜயலட்சுமியின் உறவினர்கள் கடத்திச் சென்றுள்ளனர். போலீஸ் தகவலின்படி தண்டுக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(25), சதீஷ்குமார்(30), சேயூர் காமராஜ்நகரை சேர்ந்த விக்னேஷ்(25), அசநல்லிபாளையத்தை சேர்ந்த பூபாலன்(25) அவரது தந்தை ஆண்டவமுத்து மற்றும் சதீஷ்குமார் என ஆறு பேர், ரகுநாதனை காரில் கடத்திச்சென்றுள்ளனர்.

மறைவான இடத்தில் வைத்து, சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின், அவிநாசி கங்கவர் வீதியில், அவரது வீட்டருகே இறக்கிவிட்டுவிட்டு ஆறு பேரும் தலைமறைவாகினர்.

16 வயதில் கொரோனாவோடு பிரசவத்திற்கு வந்த சிறுமி: கணவர் மீது போக்சோ பாய்ந்தது!
இது குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சேயூர் போலீசார் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், விக்னேஷ் மற்றும் பூபாலன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள பூபாலனின் தந்தை ஆண்டவமுத்து, மற்றொரு சதீஷ்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி