ஆப்நகரம்

ஆன்லைன் வகுப்பால் பெற்றோர் தொல்லை, 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

ஆன்லைன் வகுப்புகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலை முடிவுகளை தேர்வு செய்வது தொடர் கதையாகியுள்ள சூழலில், திருப்பூரில் 10ஆம் வகுப்பு மாணவர் தவறான முடிவை தேடிக் கொண்டார்...

Samayam Tamil 29 Sep 2020, 11:53 pm
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விளையாட்டு புத்தி கொண்ட 10ஆம் வகுப்பு மாணவரைப் பாடம் படிக்கச் சொல்லிப் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குறிப்பிட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil ஆன்லைன் வகுப்பால் பெற்றோர் தொல்லை, 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!
ஆன்லைன் வகுப்பால் பெற்றோர் தொல்லை, 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!


திருப்பூர், அவினாசி பிஎஸ் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். வயது 45. பொதுத் துறை வங்கி ஒன்றில் காவலராக பணிபுரிகிறார். மனைவி பிரதிபா. வயது 39. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் சஞ்சய். வயது 15. 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சஞ்சய் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்து வந்துள்ளார். ஆன்லைன் வகுப்புகளில் கவனம் இன்றி செல்போனில் விளையாடுவது, வெளியில் நண்பர்களுடன் அரட்டையடிப்பது, ஊர் சுற்றுவது என இருந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகச் செந்தில் நாதன்-பிரதிபா தம்பதியினர் சஞ்சயைப் பாடங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சஞ்சய் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்துள்ளார்.

சந்தேக மரணம்... புதைக்கப்பட்ட சிறுமி உடலை மீண்டும் எடுத்து விசாரணை

இந்நிலையில் சஞ்சய் தனது பெற்றோரும் சகோதரர்களும் வீட்டில் இல்லாத நிலையில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி படிக்கும் சிறுவர்கள் சாவு என்ன என்பதை அறியாது, இதுபோன்ற முடிவுகளைத் தேர்வு செய்வது சமூகத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சிறுவர்கள் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் மாநில அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு மன நலனை வலிமைப்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி