ஆப்நகரம்

புத்தாண்டு பரிசாக நூல் விலை ரூ.30 உயர்வு… திக்குமுக்காடும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்!

நூல் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளதால் கடும் பாதிப்படைந்துள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 1 Jan 2022, 5:25 pm
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 120 முதல் 150 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil cotton yarn price increase
cotton yarn price increase


இதன் காரணமாக பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த நவம்பர் 26ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இந்திய பருத்தி கழகம் அனைத்து ரக நூல்களின் விலையில் கடந்த டிசம்பர் 10 ரூபாய் குறைத்தது.

நுாற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் 1-ம் தேதி நுால் விலையை நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் கடந்த 2020 நவம்பர் மாதம் முதல் 2021 ஏப்ரல் வரை தமிழக நுாற்பாலைகள் ஒசைரி நுால் விலையை உயர்த்தியது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நுாற்பாலைகள் நுால் விலையை ஒரே சீராக தொடர்கின்றன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ. 50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடை வைத்தது.
அமைச்சரின் நியூ இயர் அறிவிப்புக்கு ஹிந்து முன்னணி கண்டனம்!

கடந்த ஓராண்டில் ரூ.100 ஏறியிருந்த நூல் விலை, நவம்பர் மாதத்தில் தடாலடியாக அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 ஏறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.10 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று மீண்டும் நூல் விலை 30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் அனைத்து நூல்களும் கிலோவுக்கு 350 முதல் 370 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், “மாதம் தோறும் நூல் விலையானது உயர்ந்து வருவது பின்னலாடை துறையை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். பஞ்சு விலை உயர்வை காரணம் காட்டி நூல் விலையை உயர்த்துவது நியாயமற்ற செயல் மத்திய அரசு இதற்கு உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும் இல்லாவிட்டால் பின்னலாடை துறையே இல்லாமல் போய்விடும். பின்னலாடை களை நாம் ஏற்றுமதி செய்து வந்த காலம் மாறி இந்த நூல் விலை ஏற்றத்தால் நாம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் வெகுவிரைவில் ஏற்படும் எனவே இந்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

அடுத்த செய்தி