ஆப்நகரம்

நூல் விலை கடும் உயர்வு… மீண்டும் இலை, தழைகளுக்கு மாறும் நிலை ஏற்படுமா?

நூல் விலை ஒரே நாளில் 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில் இலை, தழைகளை கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

Samayam Tamil 17 Nov 2021, 8:43 pm

ஹைலைட்ஸ்:

  • திருப்பூரில் நூல் விலை கடும் உயர்வு
  • கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Tirupur news in tamil
திருப்பூர்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில்,எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 50 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே தொழில் துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத சூழலில், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி பருத்தி மற்றும் நூல் பதுக்கலை தடுக்க வேண்டும் என பின்னலாடை நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல், பருத்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நூல் விலை உயர்வால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி நின்று போகும் சூழலில் மீண்டும் கற்கால மனிதன் போல இலை, தழைகளை ஆடையாக அணியும் சூழல் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில், இலை தழைகளை ஆடையாக அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி