ஆப்நகரம்

சடலம் மாற்றி தகனம்: திருப்பூரில் குடும்பங்களுக்குப் பல அதிர்ச்சி!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மாற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 May 2021, 1:16 pm
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை தீவிரமெடுத்துள்ள இப்போதைய சூழலில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. அப்படி திருப்பூர் மாவட்டத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பலியான 2 முதியவர்களின் உடல்களை மாற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சடலம் மாற்றி தகனம்: திருப்பூரில் குடும்பங்களுக்குப் பல அதிர்ச்சி!


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவர் நேற்று முன் தினம் காலை உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து 64 வயதாகும் மற்றொரு முதியவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

இந்த சூழலில் தங்கள் உறவினரை இழந்த ஒரு குடும்பத்தினர் நேற்று பிற்பகல் வேளையில் உடலைப் பெற்றுக் கொண்டு திருப்பூர் ரோட்டரி மின் மயானத்திற்குக் கொண்டு சென்று எரித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மற்றொரு குடும்பத்தினர் தங்கள் உறவினர் உடலைப் பெறச் சென்றபோது, வேறொருவர் சடலமிருந்துள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கூடுதல் பால் கொள்முதல்!
அதிர்ந்துபோன குடும்பத்தார் இது தனது உறவினர் சடலமில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவரது உடலை மற்றொரு குடும்பத்தார் கொண்டு சென்று எரித்து முடித்த சம்பவம் தெரியவந்தது.

அதிர்ந்துபோன 2 குடும்பத்தார் கண்ணீர் மல்க அதிகாரிகளுடன் முறையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் 2 குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தினர். எனினும் இதுபோன்ற சம்பவம் இனியாவது யாருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி