ஆப்நகரம்

தாயைச் சித்திரவதை செய்த தந்தையை கொன்று, போலீசில் சரண்!

குடியால் பல்வேறு அவலங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், திருப்பூரில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது...

Samayam Tamil 14 Jul 2020, 7:55 pm
தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தாயைக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையின் நடவடிக்கையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், கொலை செய்து போலீசில் சரணடைந்த இளைஞர்.

திருப்பூர் இடுவம் பாளையம், ஜூவா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மகன் அஜித் அசோக். வயது 21. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அருகில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

அஜித்தின் தந்தை கோவிந்தராஜ் தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து தாயை அடித்து சித்திரவதை செய்வதை வாடிக்கை வைத்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜித் பலமுறை தனது தந்தையைக் கண்டித்துள்ளார்.

அதேபோல் குடி போதையில் திங்கட்கிழமை வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ், மகன் அஜித்தையும் மனைவியையும் சித்திரவதை செய்துள்ளார். பொறுத்துக் கொள்ள முடியாத அஜித் ஒரு கட்டத்தில் கோவிந்தராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

கோவை: சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது!

இதைத் தொடர்ந்து அஜித் அருகிலிருந்த வீரபாண்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அஜித்திடம் வாக்குமூலம் பெற்ற வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித் தாயிடமும் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி