ஆப்நகரம்

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன், ராக்கெட் வேகத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருப்பூர் அருகே ஆழம் நிறைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனை சிறு காயங்களுடன் மீட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Sep 2020, 10:37 pm
பல்லடம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய சிறுவனை விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
Samayam Tamil rescue


திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையத்தைச் சேர்ந்தவர் சேவியர் (40). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி குணவதி மற்றும் இரண்டு மகள்களும் ஜோவின் (8) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று ஆலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜோவின் கால் தவறி அங்குள்ள 80 அடி ஆழம் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பல்லடம் காவல்நிலையம் மற்றும் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், அப்பகுதியினர் உதவியுடன் இணைந்து இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

கோவை, திருப்பூரைத் தகர்க்கத் திட்டம்: இந்து முன்னணிக்கு தகவல் தெரிந்தது...

இதையடுத்து, உடலில் லேசான காயங்களுடன் இருந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். விரைந்து செயல்பட்டு கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

அடுத்த செய்தி