ஆப்நகரம்

பாஸ்போர்ட்டும் இல்ல; விசாவும் இல்ல..! எப்படித்தான் வராங்களோ?

உரிய அனுமதி இன்றி திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த ஐந்து பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 20 Aug 2021, 5:54 pm

ஹைலைட்ஸ்:

  • பாஸ்போர்ட், விசா இல்லாமல் திருப்பூர் வந்த பங்களாதேஷ் காரர்கள்.
  • போலீஸ் விசாரணையில் ஐந்து பேர் சி்க்கினர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வங்கதேசத்தினர் கைது
திருப்பூரில் வங்கதேசத்தினர் ஐந்து பேர் கைது
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் முறையான அனுமதியின்றி, பங்களாதேஷை சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் பங்களாதேஷின் டாக்கா மாவட்டத்தை சேர்ந்த முகமது உசல்மியா, முகமது முத்தலிப், அஸ்ரப்ஃபுல், சையதுல்லா இஸ்லாம், பர்கத் உசேன் ஆகிய ஐந்து பேரும் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் சட்டவிரோதமாக எல்லையை கடந்து, ரயில் மூலமாக திருப்பூர் வந்து, இங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக டெய்லராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி