ஆப்நகரம்

அரசு பேருந்துகள் மழை கொட்டுகிறது... இதுதான் நவீனம்... திருப்பூர் அவலம்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேருந்துக்குள் மழை பெய்து வருகிறது. நவீன தொழில் நுட்பத்தில் பயணிகளை நனைய விட்ட அரசுப் பேருந்துகள்.

Samayam Tamil 26 Oct 2021, 3:29 pm
வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், இரவு பெய்த மழையின் போது அரசு நகர பேருந்து ஒன்றில் பேருந்து முழுக்கவே மழை தண்ணீர் கசிந்து ஒழுகியதால் பயணிகள் அனைவரும் நின்றபடியே பயணித்த அவலம் நிகழ்ந்து உள்ளது.
Samayam Tamil அரசு பேருந்துகள் மழை கொட்டுகிறது... இதுதான் நவீனம்... திருப்பூர் அவலம்!


திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அவிநாசி, சேயூர், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தெக்கலூர், அவிநாசி ஆட்டையாம்பாளையம், கோதபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 78 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதன்படி கருமத்தம்பட்டியில் இருந்து அவிநாசி வழியாக திருப்பூர் நோக்கி அரசு நகரப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

குளத்தை மறைத்து கட்டிய அரசு கட்டிடம் 4அடி தண்ணீரில் முழ்கிய அவலம் திருப்பூரில்!
கன மழை பெய்து கொண்டிருந்ததால்,பேருந்துக்குள் அங்காங்கே லேசாக ஒழுக ஆரம்பித்து உள்ளது. தெக்கலூருக்கு வரும் போது பேருந்து முழுக்கவே மழை நீர் குழாயை திறந்து விட்டது போல் தண்ணீர் வந்ததால், பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர முடியாமல் நின்று கொண்டே 10 கிலோ மீட்டர் தூரம் நனைந்தபடி அவிநாசி வரை பயணித்தனர்.

இந்த காட்சிகளை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டது தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி