ஆப்நகரம்

ஆட்டோ டிரைவரை பாராட்டிய அவிநாசி போலீஸ்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Samayam Tamil 9 Feb 2021, 11:40 am
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (45). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
Samayam Tamil ஆட்டோ டிரைவருக்கு அவிநாசி போலீஸ் பாராட்டு
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு அவிநாசி போவீஸ் பாராட்டு


அவிநாசி வடக்கு ரத வீதியில் சந்திரமோகன் நேற்று ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் நூறு ரூபாய் பணக்கட்டு கிடப்பதை கண்டுள்ளார்.

உடனே ஆட்டோவில் இருந்து இறங்கிய சந்திரமோகன், அந்த பணக்கட்டை எண்ணி பார்த்தபோது அதில் 10 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்துள்ளது.

சிவராத்திரிக்கு டூர் போலாமா? -ரயில்வே ஏற்பாடு செய்துள்ள 13 நாள் ஆன்மிக சுற்றுலா!

வாகனத்தில் செல்லும்போது யாரோ பணத்தை தவறவிட்டுள்ளனர் என்பதை அறிந்த அவர், அந்த பணத்தை அவிநாசி போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து விடுமாறும் போலீசாரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தாமே எடுத்துக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

அடுத்த செய்தி