புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம்(18). வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையத்தில் ஒரு தனியார் மில்லில் தங்கி பணி செய்து வருகிறார். நேற்று இரவு 2 மணிக்கு சொந்த ஊர் செல்வதற்காக மில்லில் இருந்து ஓலப்பாளையதில் பஸ் ஏறுவதற்காக, பச்சாபாளையம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென விக்ரமை மறித்து ஓலப்பாளையத்திற்கு வழி எப்படி போவது? என கேட்டுள்ளனர்.
பின்னர் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் தான் வைத்திருந்த கத்தியால் விக்ரமை தாக்கி அவரிடம் இருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பிடுங்கி கொண்டு வாகனத்தில் தப்பினர்.
காயம்பட்ட விக்ரமின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு? -முதலமைச்சர் திடீர் ஆலோசனை!
இந்த சம்பவம் குறித்து விக்ரம் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் வந்து இதுபோல் தொடர்ச்சியாக வழிப்பறி செய்யும் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென விக்ரமை மறித்து ஓலப்பாளையத்திற்கு வழி எப்படி போவது? என கேட்டுள்ளனர்.
பின்னர் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் தான் வைத்திருந்த கத்தியால் விக்ரமை தாக்கி அவரிடம் இருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பிடுங்கி கொண்டு வாகனத்தில் தப்பினர்.
காயம்பட்ட விக்ரமின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு? -முதலமைச்சர் திடீர் ஆலோசனை!
இந்த சம்பவம் குறித்து விக்ரம் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் வந்து இதுபோல் தொடர்ச்சியாக வழிப்பறி செய்யும் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.