ஆப்நகரம்

பாஜக கல்யாணராமனை ஊருக்குள் விடக்கூடாது... திருப்பூர் கலெக்டரிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன முஸ்லிம்கள்!

இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துமபடி பேசிவரும் பாஜகவின் கல்யாணராமன் , வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், அவர்களை திருப்பூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி, இஸ்லாமிய இயக்கங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Samayam Tamil 8 Feb 2021, 11:58 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் தெருமுனைப்பிரச்சாரம் ஒன்றில் பேசிய பாஜகவின் கல்யாணராமன், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம்
பாஜக கல்யாணசுந்தரத்துக்கு எதிராக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்


இந்த நிலையில் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைதுசெய்தனர். ஆனால் பாஜகவின் கல்யாணராமன், ஜெய்சங்கர், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும் அவர்களை திருப்பூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இஸ்லாமிய பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அடுத்த செய்தி