ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கேப்பில் மோசடி: திருப்பூரை அலறவிட்ட கொள்ளையர்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்திரம் ஒன்றில் பணம் எடுக்க வரும் வயதானவர்களை ஏமாற்றி, “க்கார்டு மேலே 16 நம்பேர் சொல்லு சார்” என மோசடியில் ஈடுபட்ட ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 13 Oct 2021, 8:09 pm
ஏடிஎம் மையங்களுக்கு தனியாக பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் கிராம மக்களிடம் தொடர்ச்சியாக பணம் எடுத்துத் தருவதாக ஒரு நபர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு, அவர்களது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடி வந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் திருட்டில் ஈடுபட்டு வந்த வட மாநில நபரை கைது செய்துள்ளனர்.
Samayam Tamil ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கேப்பில் மோசடி: திருப்பூரை அலறவிட்ட கொள்ளையர்!


திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர்கள், கிராம மக்களை நோட்டமிட்டு சிலர், பணம் எடுத்து தருவது போல் ஏடிஎம், கார்டை மாற்றியும், ஏமாற்றியும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது.

இதுபோன்ற தொடர் திருட்டு தொடர்பாக, தாராபுரம் போலீசில் பொதுமக்கள் பலர் புகார் செய்திருந்தனர்.
இதையடுத்து ஏடிஎம், மையங்களில் கிடைத்த ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரித்து வந்தனர்.

கஞ்சா சாக்லேட், சிறுமிகளை பாலியல் சித்திரவதை இப்போது ஆட் கடத்தல்: கதறும் திருப்பூர்!
இந்நிலையில் ஏடிஎம் பணம் திருட்டில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டே லால் பஸ்வான்(34) என்பவர் முதியவர்களிடம் தொடர்ந்து இதுபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தாராபுரம் அருகே உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்து கொண்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக வேலை இழந்த நிலையில், இது போல் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு கார்டுகளை மாற்றி கொடுத்து, பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தததையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி