ஆப்நகரம்

இந்தியாவிலேயே முதல் நடமாடும் திருமண மண்டபம் தொடக்கம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிற்பக் கலை வல்லுநர் ஒருவர் நடமாடும் திருமண மண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2020, 6:00 pm
உலகில் ஒவ்வொரு மனிதரும் புதிது புதிதாக சாதனை படைக்கும் காலத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் சிற்பக் கலைஞர் ஹக்கீம் என்பவர் தனிநபராக புதிய நடமாடும் திருமண மண்டபத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நடமாடும் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மதன்குமார், நந்தினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வக்கீல் கண்ணன் பங்கேற்று அறிமுகம் செய்துவைத்தார்.
Samayam Tamil நடமாடும் திருமண மண்டபம்



தமிழகம் முழுவதும் கொரானாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு உத்தரவுப்படி திருமண மண்டபங்கள் திறக்கப்படுவதில்லை. எனவே திருமண நிகழ்ச்சிகள், மற்ற விஷேச நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் சிறு கோவில்கள் அல்லது வீட்டிலேயே அளவான உறவினர்ளுடன் நடத்தி வருகின்றனர்.

இதற்கு மாற்றாக தற்போது ஹக்கீம் என்ற சிற்பக் கலைஞர் நடமாடும் திருமண மண்டபத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். சிற்பக் கலையில் தனி முயற்சியாக யானை, கொரில்லா போன்ற விலங்குகள் அசைந்து செல்வது போன்ற பொம்மைகள் செய்துள்ளார். இதேபோல் எய்ச்சர் வேன் மூலம் நடமாடும் திருமண மஹால் உருவாக்கி புதிதாக அறிமுகம் செய்துள்ளார்.

மிகக் குறைந்த வாடகையில் இந்த மண்டபத்தை உருவாக்கியுள்ள ஹக்கீம், உடுமலைபேட்டை மற்றும் அனைத்து ஊர்களுக்கும் கொண்டு சென்று குடும்ப இல்ல நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தங்களது குழுவுடன் ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக இதுபோன்ற செயற்கை விலங்குகள் மற்றும் நடமாடும் திருமண மஹால் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி