ஆப்நகரம்

விசேஷமான வேப்ப மரம்... விபரம் இது தான்!

அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்று நோயாளிகள் மத்தியிலும், இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் மத்தியிலும் வேகமாக பேமஸ் ஆகி வருகிறது. இதனால் செவ்வாய், வெள்ளி கிழமைகள் மற்றும் முக்கிய விரத நாட்களில் எந்த நேரத்திலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியே உள்ளது.

Samayam Tamil 13 Sep 2021, 2:57 pm
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு 36 படுக்கைகள் கொண்ட பிரசவ பகுதியும், தாய்-சேய் பிரிவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான ஏழை எளிய கர்ப்பிணிகள் இங்கு வந்து பிரசவம் பார்த்து செல்கின்றனர்.
Samayam Tamil வேப்ப மரம்
வேப்ப மரம்


இந்நிலையில், பிரசவ வார்டுக்கு முன்பாக இரு வேப்ப மரங்கள் அமைந்துள்ளது. அதில் வலது பக்கம் உள்ள மரம் முழுவதும் கண்ணாடி வளையல்கள் கொத்து கொத்தாக கட்டி விடப்பட்டுள்ளது. இது, ஏதோ மரத்திலேயே வளையல் காய்த்தது போல காட்சியளிப்பது அங்கு வருவோரை ஆச்சரியப்பட வைக்கிறது.

இதுகுறித்து அங்கு பிரசவத்துக்காக வந்துள்ள அம்பிகா என்பவர் கூறியதாவது:

தலைப்பிரசவம் என்பதால் வளைகாப்பின்போது அதிக கண்ணாடி வளையல்கள் அணிவிப்பர். இந்த வளையல்கள் உடையாமல் பிரசவத்துக்கு முன்பு வரை அணிய வேண்டும்.

பணம் எண்ணும் மெஷின்... வானதி சீனிவாசன் விளக்கம்!

ஏனெனில் அந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொறுமையுடன்‌ நிதானமாக செயல்படவே கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன. இவ்வாறு பிரசவத்துக்கு வருபவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்ந்ததும் வளையல்களை உடையாமல் கழற்றி இங்குள்ள வேப்பமரத்தில் கட்டி வைக்கின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தர்ணா; கணவரோடு வாழ போராடும் புது பெண்!

இவ்வாறு கட்டி வைப்பதால் சுகப்பிரசவம் ஆகும் என்று நம்புகிறோம். அதன்படியே நடக்கிறது. அதனால் தான் வளையல்களை கட்டி வைக்கிறோம். இவ்வாறு அம்பிகா கூறினார்.

புதுப்பெண் விடியவிடிய தர்ணா; சங்கதி என்னதான்னு தெரியுமா?

மரம் முழுவதுமே வளையல்களால் நிரம்பி ஆச்சர்ய படுத்தினாலும், பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறவி என்பதால் வளையல்களை மரத்தில் கட்டி விடும் ஒரு நம்பிக்கையும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக சுகப்பிரசவம் நடக்க ஒரு காரணமாக இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

அடுத்த செய்தி