ஆப்நகரம்

வாழவைக்கும் தமிழ்நாடாம்: வடமாநிலத்தவர் வயிற்றில் அடிக்கும் திருப்பூர்!

சலுகை விலை சலூன் கடையால் ஒரு கிராமமே கொந்தளித்து அக்கடைக்கு குடிநீர் வசதியை கட் செய்த சம்பவம் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது.

Samayam Tamil 6 Dec 2021, 6:11 pm
தமிழ்நாட்டிற்க்கு வந்தாரை வாழ வைக்கும் என்ற பெருமை உள்ளது. ஆனால் சமீப காலமாக பிழைப்பிற்காக வரும் வடமாநிலத்தவர்களுக்கு மேலே குறிப்பிட்ட கூற்று பொருந்தாது. ஆம் சாலைப்பணிகள் தொடங்கி, சலூன் கடை வரை வடமாநிலத்தவர் பங்களிப்பு அதிகரித்து வரும் சூழலில் திருப்பூரில் பெரும் அவலம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil வாழவைக்கும் தமிழ்நாடாம்: வடமாநிலத்தவர் வயிற்றில் அடிக்கும் திருப்பூர்!


இந்த வரிசையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள தேவனூர் புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில், கடந்த சில மாதங்களாக வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் சலூன் கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த சலூன் கடையில் முடி வெட்ட சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் குறிப்பிட்ட வடமாநிலத்தவர் சலூன் கடைக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தேவனூர்புதூர் பகுதியில் உள்ள பிற சலூன் கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விலை குறைப்பை நீக்கச் சொல்லியும் வழக்கமாக பிற கடைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையையே சம்பந்தப்பட்ட வடமாநில சலூன் கடையில் அமல் செய்யக் கோரியும் தேவனூர்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர். எனினும் வடமாநிலத்தவர்கள் தேவனூர்புதூர் பகுதி சலூன் கடைக்காரர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.

அரசு பேருந்தில் பயணம் செய்த அந்தியூர் எம்.எல்.ஏ - காரணம் என்ன?
இதை அடுத்து குறிப்பிட்ட சலூன் கடையை மூடக்கோரி தேவனூர் புதூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உடுமலை நகர செயலாளர் பொதிகை தங்கவேலு தலைமையில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் செழியன் கூறுகையில், “உள்ளூர் கடைக்காரர்களின் நலனை கருத்தில்கொண்டு விரைவாக வடமாநில நபர்கள் நடத்திவரும் சலூன் கடைக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்றார்.

வட மாநிலத்தவர் நடத்தும் சலுகை விலை சலூன் கடை பிரச்சினை, தற்போது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி