ஆப்நகரம்

நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; அணைப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கோவை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 9 Aug 2022, 11:18 am

ஹைலைட்ஸ்:

  • மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழை
  • மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு
  • நொய்யல் நீரின் TDS ஐ கணக்கிட்ட பின் மழை தண்ணீரை திறக்க வலியுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு
நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு
திருப்பூர் மாவட்டம், வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் கடந்த ஒரு மாதமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் மழை குறைந்து நீர்வரத்து குறைவாக வந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கோவை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்- திருப்பூரில் வைகோ பேச்சு!
இன்று காலை காத்தாங்கண்ணி அருகே உள்ள வெங்கலப்பாளையம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் மறுகரையில் மாடுகளை மேய்க்க சென்ற அப்பகுதி விவசாயிகள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்து மறுகரைக்கு சென்றனர். இந்நிலையில், சின்ன முத்தூர் தடுப்பணையில் இருந்து அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள அணைப்பாளயம் தடுப்பணைக்கு நொய்யல் ஆற்றின் வெள்ள நீரை திறந்து விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல் மழை நீரை முத்தூர் தடுப்பணை ஊட்டுக்கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டு, அணைப் பாளையம் தடுப்பணை நிரம்பினால்,கரூர் மாவட்டத்தில் கா. பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். எனவே பொதுப்பணித் துறையினர் நொய்யல் நீரின் TDS ஐ கணக்கிட்ட பின் மழை தண்ணீரை திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி