எதிர்பாராமல் மோதிய கார்கள்.. சம்பவ இடத்திலேயே பலியான தொழிலதிபர்.. தீவிர சிகிச்சையில் நால்வர்!
வெள்ளக்கோவில் அருகே கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பலியாகி, 4 பேர் காயம் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைலைட்ஸ்:
- வெள்ளக்கோவில் அருகே கார்கள் ஒன்றோடு ஒன்று மோதல்
- தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பலி
- 4 பேர் காயம் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சையில் அனுமதி
வெள்ளகோவில் அருகே இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் பலியானர். மேலும் நான்கு பேர் காயம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், சீரங்கராககவுண்டன்வலசு ரோடு, அரண்மனைத்துறை நகரை சேர்ந்த அப்புக்குட்டி மகன் ராஜ்குமார்(32) தொழிலதிபரான இவருக்கு, திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் வேலை காரணமாக தனது காரில் வெள்ளக்கோவிலில் இருந்து ஓலப்பாளையம் நோக்கி சென்றார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மணிவேல்(55) சேகர்(50) செல்வி(40) மணிமொழி(18) ஆகிய நால்வரும் பொலிரோ காரில் கரூர் செல்ல சென்றனர். கோவை கரூர் தேசியநெடுஞ்சாலை, வெள்ளக்கோவில் அடுத்த ஓலப்பாளையம், ஜகத்குரு மில் அருகே இரு கார்களும் எதிர்பாரவிதமாக மோதிக் கொண்டது.
விபத்தில் ராஜ்குமாருக்கு பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்தார். மணிவேல், சேகர், செல்வி, மணிமொழி ஆகியேர் அருகில் உள்ளவர்களால் மீட்க்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர்.
திருப்பூர், கோவையில் 15 நாள் போராட்டம்… 3 லட்சம் விசைத்தறிகள் முடங்கியது!
விபத்தில் இறந்த ராஜ்குமாரின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மணிவேல்(55) சேகர்(50) செல்வி(40) மணிமொழி(18) ஆகிய நால்வரும் பொலிரோ காரில் கரூர் செல்ல சென்றனர். கோவை கரூர் தேசியநெடுஞ்சாலை, வெள்ளக்கோவில் அடுத்த ஓலப்பாளையம், ஜகத்குரு மில் அருகே இரு கார்களும் எதிர்பாரவிதமாக மோதிக் கொண்டது.
விபத்தில் ராஜ்குமாருக்கு பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்தார். மணிவேல், சேகர், செல்வி, மணிமொழி ஆகியேர் அருகில் உள்ளவர்களால் மீட்க்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர்.
திருப்பூர், கோவையில் 15 நாள் போராட்டம்… 3 லட்சம் விசைத்தறிகள் முடங்கியது!
விபத்தில் இறந்த ராஜ்குமாரின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.