ஆப்நகரம்

திருப்பூர் பல்லடம் நகராட்சி கூட்டம்; செய்தியாளர்களை புறக்கணித்த நகராட்சி மன்ற தலைவி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி தலைவியாக பதவி வகித்து வருபவர் கவிதா மணி இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை செய்தியாளர்கள் முன்வைத்துள்ளனர்

Curated byமதுமிதா.M | Samayam Tamil 31 May 2023, 4:09 pm

ஹைலைட்ஸ்:

  • பல்லடம் நகராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டம்

  • பல்லடம் நகராட்சி பெண் தலைவி கவிதா மணி

  • கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது

  • செய்தியாளர்களை புறக்கணித்த நகராட்சி பெண் தலைவி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பல்லடம் நகராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டம்
பல்லடம் நகராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டம்
பல்லடம் நகராட்சியில் இன்று சாதாரண கூட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் இன்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த சாதாரண கூட்டமானது ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பல்லடம் நகராட்சி பெண் தலைவி கவிதா மணி தலைமையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் 18 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் ஆரம்பிக்கும் போது செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முயற்சி செய்தனர்.

திருப்பூர்; காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி!
பல்லடம் நகராட்சி பெண் தலைவி
இந்நிலையில் அப்போது செய்தியாளர்களை வெளியேறுங்கள் எனது தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு பொது பார்வையாளர்கள் இல்லாமல் தான் கூட்டம் நடத்தப்படும் என பல்லடம் நகராட்சி பெண் தலைவி தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் இத்தனை ஆண்டுகளில் இல்லாமல் மக்களுக்கு வெட்ட வெளிச்சமில்லாமல் கூட்டம் நடத்துவது சரியா அப்படியானால் பொதுமக்கள் பிரச்சினைகளை மறைக்க காரணம் என்ன?

செய்தியாளர்களை புறகணித்தநகராட்சி பெண் தலைவி
மேலும் கவுன்சிலர்களுக்கு இதனால் உரிமை பரிக்கப்படுமே என கேள்வி எழுப்பினர்கள். அப்போது செய்தியாளர்கள் அவதூறு பரப்பி வருவதாகவும் பெண் தலைவி கவிதாமணி குற்றச்சாட்டை வைத்தார். அதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் செய்தியாளர்களை புறக்கணிக்க கடிதத்தில் கையெழுத்து போட்டதாகவும் கூறினார்.

திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் மறுப்பு
ஆனால் திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் தலைவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே திமுக நகர செயலாளர் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்டவர்கள் மீது நீதிமன்ற விசாரணை, மற்றும் நகராட்சியில் திமுக நகர செயலாளர் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து நகராட்சி அலுவலகத்தை திமுக அலுவலகம் போல் நடத்துவதாக தெரிவித்தனர்.

செய்தியாளர்களின் குற்றாச்சாட்டு
மேலும் கூட்டமே நடத்தாமல் நடத்தியதாகவும் அதில் டெண்டர் தீர்மானங்கள் நிறைவேற்ற முயற்சி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும் டெண்டர் விவகாரங்கள் தற்போது பொதுமக்களிடம் மறைக்கபடுகின்றது. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை செய்தியாளர்கள் முன் வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
மதுமிதா.M
நான் மதுமிதா கணினி அறிவியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால் கடந்த 1 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றேன். க்ரைம், சினிமா, தேசிய செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. தற்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் தமிழில் பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி