ஆப்நகரம்

மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை... ஜமாபந்திக்கு பதாகைகளுடன் வந்த பெற்றோர்!

ஜமாபந்தியில் நிலத்தை மீட்டு தங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் செய்யுமாறு கையில் பதாகைகளுடன் வந்து பெற்றோர் மனு அளித்தனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 24 May 2022, 5:35 pm

ஹைலைட்ஸ்:

  • ஜமாபந்தியில் பதாகையுடன் வந்து மனு அளித்த பெற்றோர்
  • நிலத்தை மீட்டு தங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் செய்யுமாறு கோரிக்கை
  • மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஜமாபந்தியில் பதாகையுடன் வந்து மனு அளித்த பெற்றோர்
பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் நிலத்தை மீட்டு தங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் செய்யுமாறு கையில் பதாகைகளுடன் வந்து பெற்றோர் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையிலான 1431 ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்தனர். மாற்று திறனாளிகளுக்கான எந்த வித ஏற்பாடுகளும் செய்யாததால் கரைப்புதூர் கிராமத்தில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி மகாதேவன் என்பவர் சக்கர நாற்காலி இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்து தவழந்து வந்து இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதன் தொடர்ச்சியாக பல்லடம் வடுகபாளையத்தில் வசித்து வரும் ராஜகோபாலன் என்பவர் தனது பெயரில் உள்ள சொந்தமான நிலத்தை கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டதாகவும் 13 வருட போராட்டத்திற்கு பிறகு கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் அருகே பயங்கர விபத்து... இரு பெண்கள் பரிதாபமாக ‌பலி!

தற்போது தனி பட்டா கேட்டு ராஜகோபாலன் குடும்பத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.மேலும் எங்கள் நிலத்திற்கு தனி பட்டா கொடுத்தால் மட்டுமே என் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் எனவும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு குடும்பத்தினருடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி