ஆப்நகரம்

Tirupur Tasmac: திருப்பூரில் டாஸ்மாக்குக்கு வந்த சோதனை

மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகள் ஒரு வார காலத்தில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்

Samayam Tamil 2 Sep 2020, 10:41 pm

திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி ஒரே நேரத்தில் 7 இடங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Samayam Tamil டாஸ்மாக் போராட்டம்


திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சிங்கார வேலன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . மாற்று இடம் பார்த்து கடையை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இருந்தும் கடை இதுவரை அப்புறப்படுத்தப்படவில்லை.

இதைக் கண்டித்தும் அதேபோல் ஜீவா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை மாற்றக் கோரியும் சிங்காரவேலன் நகர், ஜீவா காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிங்காரவேலன் நகர் ஜீவா காலனி உள்ளிட்ட 7 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்கள்..! அதிர்ச்சி வீடியோ

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகள் ஒரு வார காலத்தில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதே சமயம், சொன்னபடி ஒரு வார காலத்திற்குள் கடையை அப்புறப்படுத்தாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி