ஆப்நகரம்

ஆர்டிக் பகுதியில் இருந்து 40 ஆயிரம் கி.மீ. பறந்து திருப்பூர் வந்துள்ள அரிய பறவை!

ஆர்டிக் கடற்கரை பகுதிகளில் வாழும் அரிய பறவையான ’ரெட் நெக்டு பேலரோப்’ 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2021, 10:29 pm
உலகின்‌ வட துருவ பகுதியான ஆர்ட்டிக் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நாடுகளின் கடற்கரை பகுதிகளில்,உப்புநீர் சதுப்பு நிலங்களில் வசிக்கக்கூடிய பறவையான (red-necked phalarope) ரெட் நெக்டு பேலரோப் 40 ஆயிரம் கிலோமீட்டர் கடற்கரையை ஒட்டிய பகுதி வழியாக வலசை மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு வந்துள்ளது.
Samayam Tamil திருப்பூர் வந்துள்ள அரிய பறவை


இது குறித்து தாராபுரம் இயற்கை கழகத்தைச் சேர்ந்த மகேஷ் கூறுகையில், ரெட் நெக் பல்ரோபே பறவைகள் உப்பு நீர் சார்ந்த பகுதியில் வாழக்கூடிய ஒன்றாகும். இப்பறவைகள் 9 மாதங்கள் கடற்கரை பகுதியில் வசிக்கும்,. அக்டோபர் முதல் மார்ச் வரை ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளுக்கும், ஐரோப்பா மற்றும் ஆர்டிக் பகுதியில் இருந்து வலசை செல்லும்.

இப்பறவைகள் கடற்கரை ஒட்டியே தங்களது வலசை பாதையை அமைத்துக் கொள்வதால், இதனை நிலப்பகுதிகளில் காண்பது மிக மிக அரிதான ஒன்றாகும்.

சில்மிஷம் செய்த நகராட்சி ஆணையர்… ஆட்சியரிடம் கூட்டமாக புகார் அளித்த பெண்கள்!

ஆர்டிக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஏறக்குறைய 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் கடந்து செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணையில் கண்டறிந்ததாகவும், இப்பறவையினை நிலப்பரப்பில் பார்க்கவே முடியாத நிலையில், தற்போது நாங்கள் அணைப் பகுதியில் பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

ஆர்டிக் பகுதியில் இருந்து வலசை செல்லும் பாதையில் காணக் கிடைக்காத இந்த அரியப் பறவை, ஓய்வுக்காக திருப்பூர் மாவட்ட பகுதியில் கண்டறியப்பட்டு, அதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி