ஆப்நகரம்

திருப்பூர் ஆட்சியரிடம் பள்ளி மாணவியின் உருக்கமான கோரிக்கை!

பெற்றோர் இறந்து விட்டதால் கூட்டுறவு வங்கியில் அவர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக்கோரி 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் உருக்கமான மனு அளித்தார்.

Samayam Tamil 13 Jun 2022, 5:31 pm
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவரது தந்தை இறந்துவிட்டார்.
Samayam Tamil Tirupur school student


இந்நிலையில் அவரது தாயார் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.5 லட்சம் கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டினார். அதன் கிரகப்பிரவேசத்திற்கு உறவினர்களை அழைக்க சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனால் மகாலட்சுமி அவரது பாட்டியின் ஆதரவில் இருந்து வருகிறார். அவருக்கும் வயது முதுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு வங்கி மூலம் பெற்ற கடன் ரூ.5 லட்சத்தை கட்ட முடியாத சூழலில் உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு; பாடம் கிடையாதாம்; ஒரு வாரத்திற்கு மாணவர்கள் ரிலாக்ஸ்!

தங்களது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, பெற்றோர் வாங்கிய கடன் ரூ 5 லட்சத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மேலும் தனது கல்விக்காக அரசு உதவி செய்ய வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை மனுவை வழங்கினார்.

அடுத்த செய்தி