ஆப்நகரம்

பாலியல் தொல்லை தந்த மேலதிகாரி... சீறி எழுந்த சிங்கப்பெண்கள்

தம்மிடம் தவறாக நடக்க முயன்ற மேலதிகாரியை சாமர்த்தியமாக திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர் திருப்பூரில் இரு பெண்கள்.

Samayam Tamil 30 Sep 2020, 6:44 pm
பணியிடப் பாதுகாப்பு, பொதுவெளிப் பாதுகாப்பு என்று பெண்களைப் பாதுகாப்பதில் அரசு நிறைய முன்னெடுப்புகளை செய்து கொண்டே வருகிறது. எனினும், வீரீயம் குறைந்தபாடில்லை. தனிமனித ஒழுக்கமுமே தீர்வு என்று முன்வைக்கப்பட்டாலும், பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில், தம்மிடம் தவறாக நடக்க முயன்ற மேலதிகாரியை சாமர்த்தியமாக திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர் திருப்பூரில் இரு பெண்கள்.
Samayam Tamil கோப்புப்படம்


திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் . இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிவக்குமார் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மதுரை மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இரு பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அந்த 2 பெண்களும் திட்டமிட்டனர். இதனையடுத்து, கடந்த 14-ந் தேதி சிவகுமாரை பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டை காட்டுப்பகுதிக்கு உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி 2 பெண்களும் அழைத்து சென்றனர்.

அங்கு சென்றதும், இருவரும் சேர்ந்து சிவக்குமாரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அடித்து கட்டிப்போட்டனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த இளம்பெண்கள் கொடுத்த புகாரின் பெயரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். அதுபோல சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர்.

அடுத்த செய்தி