ஆப்நகரம்

மடத்துக்குளம் அருகே பயங்கரமாக வீசிய சூறாவளி காற்று... வேரோடு மரங்கள் சாய்ந்தன!

மடத்துக்குளம் அருகே திடீரென சூறாவளி காற்று வீசியதால் கோழிப்பண்ணைகள் மற்றும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை, சோளப்பயிர்கள் சேதம் ஆகின. மேலும் வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 18 May 2023, 4:14 pm

ஹைலைட்ஸ்:

  • மடத்துக்குளம் அருகே திடீரென்று வீசிய சூறாவளி காற்று
  • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் சாய்ந்தன
  • வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
  • இரண்டு கோழி பண்ணைகளில் பெருமளவு பாதிப்பு
  • வருவாய்த்துறையினர் ஆய்வு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சூறாவளி காற்றால் மரம்  வேரோடு சாய்ந்துள்ளது
சூறாவளி காற்றால் மரம் வேரோடு சாய்ந்துள்ளது
சூறாவளி காற்றுடன் மழை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம், சாமராயப்பட்டி, உரல்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
விவசாய நிலங்கள் பாதிப்பு

குறிப்பிட்டு சில பகுதிகளில் மட்டும் அதிவேகமாக சூறாவளி காற்று வீசி உள்ளது. சுமார் பத்து நிமிடங்கள் வீசிய சூறாவளிக் காற்றில் விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த இரண்டு ஏக்கர் வாழை மரங்கள் முறிந்தது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் பத்து ஏக்கர் அளவுள்ள சோளப்பயிர்கள் சாய்ந்தது. சில பகுதிகளில் தென்னை மரங்கள் மற்றும் வேப்ப மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மக்கள் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
திருப்பூர்; அனுமதித்த நேரத்தை மீறி சாலையில் உலா வரும் கனரக வாகனங்கள்...!
கோழிகள் இறப்பு

இரண்டு கோழி பண்ணைகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. கோழிப்பண்ணை சிமெண்ட் சீட்டுகள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்றில் பறந்தன. இதனால் கோழிகளும் இறந்தன.

25 ஆண்டுகளுக்கு முன்பு...

தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் சேதம் அடைந்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோன்ற சூறாவளி காற்று இப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி