ஆப்நகரம்

தமிழக அமைச்சரின் உதவியாளர் கடத்தல்? - பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி!

உடுமலையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Sep 2020, 2:30 pm
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனின் சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு அமைச்சரின் உதவியாளராக கர்ணன் என்ற நபர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் கர்ணனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். அவரை வெளியில் நின்று கொண்டிருந்த காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
Samayam Tamil Kidnap


இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி திஷா மிட்டல், டிஎஸ்பி ரவிகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் கர்ணன் மர்ம நபர்களால் காரில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனின் உதவியாளர் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் கொடுமை: தண்ணி இல்ல, ஆக்சிஜன் இல்ல, நல்லா இருந்த மனுஷன் போயிட்டாரு!

மேலும் திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நிகழ்ந்த கடத்தல் சம்பவத்தில் உடுமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி