திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை (2262) செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே குமார் என்பவருக்கு சொந்தமான பார் (மதுபான கூடம்) செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்தொற்று காரணமாக தமிழக அரசு டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்கு தடை விதித்துள்ளது. இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரின் மேற்கூரை கனமழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்தது.
டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரின் மேற்கூரையானது மரத்தால் செய்யப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.
மண்ணை வாரி எரிந்து ஸ்டாலின் அரசுக்கு சாபம் கொடுத்த பெண்கள்: திருப்பூர் சம்பவம்!
நீண்ட நாட்களாக செயல்படாமல் பராமரிப்பின்றி இருந்ததால் கனமழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பாரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், சமையல் உபகரணங்கள், குளிர்பானங்கள் ஆகியவை சேதமடைந்தன. பாரில் மது அருந்த தமிழக அரசு தடை விதித்திருப்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரின் மேற்கூரையானது மரத்தால் செய்யப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.
மண்ணை வாரி எரிந்து ஸ்டாலின் அரசுக்கு சாபம் கொடுத்த பெண்கள்: திருப்பூர் சம்பவம்!
நீண்ட நாட்களாக செயல்படாமல் பராமரிப்பின்றி இருந்ததால் கனமழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பாரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், சமையல் உபகரணங்கள், குளிர்பானங்கள் ஆகியவை சேதமடைந்தன. பாரில் மது அருந்த தமிழக அரசு தடை விதித்திருப்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.