ஆப்நகரம்

திருப்பூர் சாலையில் படகுதான் விடனும்: 5 மணி நேரம் வெளுத்த கனமழை!

திருப்பூர் மாவட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலடன் கன மழை பெய்தது. அதைத் தொடர்ந்தும் குறைவான இடைவெளியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Samayam Tamil 18 Nov 2021, 8:41 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று இரவு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது வருகிறது.
Samayam Tamil thunderstorm pouring at tirupur heavy flood seems like boat need to be sailed
திருப்பூர் சாலையில் படகுதான் விடனும்: 5 மணி நேரம் வெளுத்த கனமழை!


இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த மழை காரணமாக சாலைகளில் கடும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடி வெள்ளத்தில் தங்கள் வீடுகளுக்குச் சென்றவர்கள் நிலை பரிதாபமாக இருந்தது.

மீண்டும் தொடங்கியது மழை, மக்களே உஷாரா இருங்க: காங்கேயத்தில் இடியுடன் பெய்யத் தொடங்கியது!
பெருமாநல்லூர் சாலையில் உள்ள நெசவாளர் காலனி, பிச்சம் பாளையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம்,உடுமலை,தாராபுரம் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலைக்கு சென்ற பலரும் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல்,கனமழை யின் காரணமாக ஆங்காங்கோ சாலை ஓரங்களில் நின்றபடி மழை நிற்பதற்காக காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி