திருப்பூர் குடியிருப்பு வீடுகளில் மறைந்திருக்கும் அபாயம் - பேராபத்தில் இருந்து தப்பிய சிறுவன்
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து நான்கு வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.
Samayam Tamil 22 May 2022, 4:20 pm
ஹைலைட்ஸ்:
- குடியிருப்பு வீடுகளில் உள்ள வீட்டின் மேற்கூரை விழுந்தது
- வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சிறுவன் காயம்
- காயமடைந்த சிறுவனின் சிகிச்சைக்காக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிய திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் கோரிப்பாளையம் பகுதியில் ஏ.டி.காலனி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2002ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 16 வீடுகள் கட்டப்பட்டன. வீடுகள் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகள் ஆன நிலையில் உயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. சேதம் எனில் சாதாரணமான சேதம் அல்ல, வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் ஏற்கனவே அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த பயத்தில் தான் இருந்தனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கும் கூலி தொழிலாளியான தயாநிதி என்பவர் தனது மனைவி வெண்ணிலா மற்றும் 4 வயது மகன் பரசுராமன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தது.
அதில் அந்த வீட்டில் இருந்த சிறுவன் பரசுராமனின் தலையில் நீர் கூரை விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சேதமடைந்து காணப்படும் வீடுகள் குறித்து தாசில்தார், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் இந்த வீடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அன்னூர் பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சிறுவன் பரசுராமனின் மருத்துவ சிகிச்சைக்கு 5000 ரூபாய் நிதி உதவியை திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கும் கூலி தொழிலாளியான தயாநிதி என்பவர் தனது மனைவி வெண்ணிலா மற்றும் 4 வயது மகன் பரசுராமன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தது.
அதில் அந்த வீட்டில் இருந்த சிறுவன் பரசுராமனின் தலையில் நீர் கூரை விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சேதமடைந்து காணப்படும் வீடுகள் குறித்து தாசில்தார், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் இந்த வீடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அன்னூர் பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சிறுவன் பரசுராமனின் மருத்துவ சிகிச்சைக்கு 5000 ரூபாய் நிதி உதவியை திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.