ஆப்நகரம்

பயிர் சாகுபடியில் சூப்பர் நடை முறை; வேளாண் அதிகாரிகள் ஹேப்பி நியூஸ்!

பயிர் சாகுபடி குறித்து திருப்பூர் வேளாண் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 23 Dec 2022, 4:00 pm
பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும்போது காற்றில் இருக்கும் தழைச்சத்து கிரகிக்கப்பட்டு பூமியில் நிலை நிறுத்துவதால் மண்வளம் மேம்படுவதாக நெல் தரிசில் பயறு வகை சாகுபடி விழிப்புணர்வு முகாமில் வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Samayam Tamil Tirupur district news


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாரத்தில் அமைந்துள்ள நத்தக்கடையூர் பழையகோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கான நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி கிருத்திகா ஆகியோர் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

பற்ற வைத்த பண்ருட்டி..பதற்றத்தில் எடப்பாடி; அதிமுக பர..பர..!
காங்கயம் வட்டாரத்தில் சாகுபடி செய்து உள்ள நெல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அறுடைக்கு வர இருக்கிறது. நெல் தரிசு பூமியில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யும்போது காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகித்து பூமியில் நிலை நிறுத்துவதால் மண்வளம் மேம்படுகிறது.

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளிவில் கலந்து விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பேக்டீரியா உடன் சிறிது அரிசி கஞ்சி கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம் வேட் முடிச்சுகள் உருவாகின்றன.

இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பூமியில் நிலை நிறுத்துகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் தெளிந்த கரைசலை 200 லிட்டர் நீரில் கலந்து செடிகள் நன்கு நனையும்படி விதைத்து 25ம் நாள் ஒரு முறையும் 45 ஆம் நாள் ஒரு முறை தெளித்து நல்ல பயன் பெறலாம்.

உதயநிதி ஸ்டாலின் எந்த மதம்?; அவரே உடைத்த.. மகா ரகசியம்!
பயறு வகை சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் மற்றும் விதை கிராமத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தனர்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நத்தக்கடையூர் துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் சிறப்பாகவே செய்து இருந்தனர்.

அடுத்த செய்தி