ஆப்நகரம்

ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்… ரூ.900 கோடி உற்பத்தி பாதிப்பு!

திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் விலை உயர்வை கண்டித்து இன்று 8-வது நாள் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக ரூ.900 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

Samayam Tamil 29 May 2022, 3:25 pm
விசைத்தறிகள் மூலம் உற்பத்தியாகும் காடா ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப் பொருளாக உள்ள நூல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்தும்,விலையை கட்டுப்படுத்தக்கோரியும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வரும் ஜுன் 5-ஆம் தேதி வரை 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil Tirupur and Coimbatore fabric makers garments strike latest news


இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 8-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், ரூ.900 கோடி அளவுக்கு காடா துணி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தால், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமன்றி, அதனை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், ஒர்க் ஷாப் தொழிலாளர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோதிரங்களை விழுங்கிய மீன் வியாபாரி.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

தொடர்ந்து இந்த மாதமும் சந்தையில் பஞ்சு விலை உயர்ந்து வரும் நிலையில், வரும் மாதத்திலும் நூல் விலை ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து ஜவுளித் தொழிலை காக்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி