ஆப்நகரம்

ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்... கோடியில் ஏற்படும் இழப்பு!

திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 23 May 2022, 4:36 pm

ஹைலைட்ஸ்:

  • நூல் அளவைக் கட்டுப்படுத்தக் கோரி வேலை நிறுத்தம்
  • 100 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்ப
  • 2லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வேலை நிறுத்தம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 100 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1500 க்கு மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், 63.வேலம்பாளையம்
சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்க ளில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

முறுக்கேறிய முருங்கை விலை; ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

திருப்பூர், கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும். நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே விசைத்தறி ஜவுளி உறத்தியாளர்கள் சார்பில் 50% உற்பத்தி நிறுத்தம்,நூல் கொள்முதல் நிறுத்தம், கடந்த 16,17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயர்வாகாத காரணத்தால் இந்த 15 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை , திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளகள் நேரடியாக பாதிக்கப்படுவர். பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடைவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோவை , திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் 500 கோடி அளவிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி