ஆப்நகரம்

களைக்கொல்லியால் நேர்ந்த சோகம்; கதறும் விவசாயி; கண்டுக்கொள்ளுமா அரசு?

பயிருக்கு களைக் கொல்லி மருந்து தெளித்து மண் மலடான சம்பவம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நல்லகாளிபாளையம் கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 18 Aug 2022, 3:19 pm

ஹைலைட்ஸ்:

  • களைக்கொல்லி மருந்து தெளித்ததால் மண் வளம் பாதிப்பு‌
  • வேறு பயிர்களும் வளராத தால் விவசாயி அதிர்ச்சி
  • வேளாண்துறை போர்க்கால நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil agri
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நல்லகாளிப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு ஏக்கரில் கம்பு பயிரிட்டு இருந்தார். இவர் கம்பு பயிருக்கு வழக்கம் போல களையை அகற்ற களைக்கொல்லி மருந்தினை பயன்படுத்தி உள்ளார். களைக்கொல்லி மருந்து பயன்படுத்திய ஒரே வாரத்தில் இரண்டு ஏக்கர் கம்பு பயிறும் முழுவதுமாக கருகி விட்டன.
அதிர்ச்சி அடைந்த விவசாயி சங்கர் அடுத்தடுத்து சாகுபடி செய்த மக்காச்சோளம், வெங்காயம் ஆகியவையும் கருகியதால் மிகுந்த நஷ்டத்துக்கு தள்ளப்பட்டார். இது குறித்து களைக் கொல்லி வாங்கிய உரக்கடையில் முறையிட்டும் எந்த பயனும் இல்லாததால், 10 ஏக்கரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திலும் புகார் அளித்துள்ளார்.

உரிய நிவாரணம் வழங்கி மீண்டும் மண் வளத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என விவசாயி சங்கர் கோரிக்கை வைத்துள்ளார். அறிவுறுத்தப்பட்ட களைக்கொல்லியை பயன்படுத்திய போதும் நிலத்தின் மண்வளம் முழுவதுமாக கெட்டு மண் மலடாகி உள்ளதாக உரக்கடைக்காரரிடம் தெரிவித்ததாகவும், மண்ணை வளப்படுத்திய பின் வேறு பயிர் செய்யவும் என அறிவுரை தெரிவித்து விட்டு இதுவரை எங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கிடைக்கவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அடிபம்பு மீது மணல் கொட்டி மறைப்பு; காங்கேயம் சாலை விரிவாக்கப் பணியில் அட்டூழியம்!

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில்; தொடர் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளை இது போன்று உர விற்பனையாளர்கள் ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது. வேளாண்மை துறை அமைச்சர் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து உரக்கடைகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முறையாக ஆராய்ச்சி மேற்கொண்டு தயாரிக்கப்படாத பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், அதை விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயி சங்கருக்கு நேர்ந்த அவல நிலை இனி எந்த விவசாயிக்கும் நடக்காமல் இருக்க தமிழக அரசின் வேளாண் துறை போர்க்கால நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என அவர் கூறினார்
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி