திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை தென்மேற்கு பருவமழை மூலம் மடத்துக்குளம் டுமலை உள்ளிட்ட தாலூக்கா பகுதிகளில் சாரல் மழை பெறும் பகுதியாக உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் பருவ மழை தீவிரமடையும் போது இங்கு தொடர்ந்து சாரல் மழை பெய்யும். இதனை பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் அவரை, தட்டை, பச்சைபயிறு, கொள்ளு மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்வர்.
இந்நிலையில் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி வரும் பாம்பாறு, வால்பாறை பகுதியில் இருந்து சின்னாறு,கொடைக்கானல் வனப்பகுதியில் உற்பத்தியாகி வரும் தேனாறு உள்ளிட்ட சிற்றாறுகளைத் தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.
தென்னை விவசாயிகளின் முக்கிய கவனத்திற்கு....!
அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம், கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து உள்ளது. அணைக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது.
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் தற்போது 62.77அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 489 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகின்ற திருமூர்த்தி அணையும் நீர்வரத்து இன்றி உள்ளது.இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3,76,152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அதுமட்டுமின்றி தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அணையின் நீர் இருப்பு உயர்ந்த பின்பு சுழற்சி முறையில் 4 மண்டலங்கள் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 30.05 கன அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மும்முரமாக நிலத்தை உழுது சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி கோடை உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பழைய முறைப்படி உழவு மாடுகள் கொண்டும் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி வரும் பாம்பாறு, வால்பாறை பகுதியில் இருந்து சின்னாறு,கொடைக்கானல் வனப்பகுதியில் உற்பத்தியாகி வரும் தேனாறு உள்ளிட்ட சிற்றாறுகளைத் தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.
தென்னை விவசாயிகளின் முக்கிய கவனத்திற்கு....!
அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம், கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து உள்ளது. அணைக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது.
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் தற்போது 62.77அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 489 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகின்ற திருமூர்த்தி அணையும் நீர்வரத்து இன்றி உள்ளது.இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3,76,152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அதுமட்டுமின்றி தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அணையின் நீர் இருப்பு உயர்ந்த பின்பு சுழற்சி முறையில் 4 மண்டலங்கள் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 30.05 கன அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மும்முரமாக நிலத்தை உழுது சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி கோடை உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பழைய முறைப்படி உழவு மாடுகள் கொண்டும் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.