ஆப்நகரம்

மதுரையைத் தொடர்ந்து திருப்பூரிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு

திருப்பூரிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jun 2020, 5:58 pm
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து திருப்பூர் மாவட்டத்திலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tirupur shop timings reduced after madurai lockdown
மதுரையைத் தொடர்ந்து திருப்பூரிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனபோதும் பாதிப்பு அதிகரிக்கும் வேகம் குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 21 மற்றும் 28ஆம் தேதிகளில் எந்தவிதத் தளர்வுகளுமற்ற முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 5 ஆவது மாவட்டமாக மதுரை மாவட்டத்திலும் நாளை முதல் ஜுன் மாதம் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதேபோல திருப்பூரிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா: கண்காணிப்பு அதிகாரிகள் இடமாற்றம்!


இதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருப்பூரில் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளியிலும் கூட முகக் கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடையாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி