ஆப்நகரம்

சாலையில் நடந்துச்சென்ற பெண் VAO தாலி செயின் பறிப்பு!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சாலையில் நடந்துச்சென்ற பெண் கிராம நிர்வாக அலுவலரின் தாலிச்செயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Jun 2022, 9:30 am
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா ( வயது 38). இவர் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
Samayam Tamil Tirupur vao chain snatching
கோப்புப்படம்


பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயசுதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசுதா சத்தம் போட்டார். ஆனால், காலை நேரத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் மர்ம ஆசாமிகள் எளிதாக தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து ஜெயசுதா தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் முகம் பதிவாகி உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றி இது போல் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம ஆசாமிகள் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி