ஆப்நகரம்

அட்டாக் பண்ண சிறுத்தை... நூலிழையில் உயிர் தப்பிய வன ஊழியரின் வைரல் வீடியோ!

விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தையை பிடிக்கச் சென்ற வன ஊழியரை சிறுத்தை தாக்க முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2022, 10:01 pm

ஹைலைட்ஸ்:

  • திருப்பூரில் வன ஊழியரை தாக்கிய சிறுத்தை
  • நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் காட்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியில் வரதராஜன் என்பவரது தோட்டத்தில் சோளம் அறுவடை நடைபெற்றுது. தோட்டத்தில் இருந்து மர்ம விலங்கு ஒன்று தோட்ட உரிமையாளர் வரதராஜன் மற்றும் அவரது உதவியாளர் மாறனை தாக்கியுள்ளது. அவர்களது அலறல் சத்தம் கேட்டுச்சென்ற அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என சந்தேகத்தினர். இதனால் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தேஜஸ்வி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள்... தலையிடுமா தமிழக அரசு ?

மேலும், கோவையில் இருந்து சிறுத்தையை பிடிக்க கூண்டு கொண்டு வரப்பட்டு சோளக்காட்டின் அருகில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டுத் தீவன புல் வளர்ந்துள்ள பகுதியில் தேடிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை வெளியே வந்ததை கண்டு வனத்துறையினர் தெறித்து ஓடினர்.

இதில் மணிகண்டன் என்ற வேட்டை தடுப்பு காவலரை சிறுத்தை தாக்கியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் முதலுதவி சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த விவசாய நிலத்தில் சிறுத்தை இருப்பது உறுதியானதை தொடர்ந்து பாப்பங்குளம் கிராம மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வருவாய்த்துறையினர் அறுவுறுத்தியுள்ளனர்.

வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டனை சிறுத்தை தாக்கிய சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி