ஆப்நகரம்

மைனர் மகனோடு கூட்டச்சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: திருப்பூரில் கொடூரம்!

குடும்பத் தகராறில் கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி மற்றும் 17 வயது மகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 27 Sep 2021, 11:00 pm
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை இந்திரா காலனியை சேர்ந்தவர் ராயப்பன்(46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள்(45). இவர்களுக்கு 17 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
Samayam Tamil மைனர் மகனோடு கூட்டச்சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: திருப்பூரில் கொடூரம்!


இந்த சூழலில் கணவன்‌ மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படி சண்டை நடக்கும்போது அருகில் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் ராயப்பன் வீட்டில் அவரது மனைவியும், மகனும் இல்லாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்தபோது, ராயப்பன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்ஃபி எடுக்க வேற இடம் கிடைக்கலயா..? இளைஞருக்கு நேர்ந்த கதியை பாருங்க!
மேலும் உறவினர் வீட்டில் இருந்த ராயப்பனின் மனைவி மகனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், ஏற்பட்ட தகராறில் முருகாத்தாள் மற்றும் அவர்களது 17 வயது மகன் ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக சம்பவ இடத்திலேயே ராயப்பன் உயிரிழந்ததும், பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்பி உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று விட்டதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

அடுத்த செய்தி