ஆப்நகரம்

கணவன் செய்த போனை எடுக்கவில்லை, நகை என எதுவுமின்றி சடலமாக கிடந்த பெண்: திருப்பூரில் பதற்றம்!

திருப்பூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாகவிருந்த இளம் பெண்ணிடமிருந்து தங்க நகைகளைப் பறிப்பதற்காகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 25 Aug 2021, 11:29 am
திருப்பூர் மாவட்டம், அவினாசி காமராஜ் வீதி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். வயது 35. அவினாசி அருகே உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ப்ரியா(30) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
Samayam Tamil கணவன் செய்த போனை எடுக்கவில்லை, நகை என எதுவுமின்றி சடலமாக கிடந்த பெண்: திருப்பூரில் பதற்றம்!


வழக்கம்போல் பணிக்குச் சென்ற விஜய் தனது மனைவி செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் மனைவி பகல் 11: 30 மணி முதல் பகல் 2 மணி வரை அழைப்பு எதையும் ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜய் வீட்டின் அருகிலிருக்கும் மளிகைக் கடைக்கு அழைத்துக் கடை உரிமையாளர் சித்ரா என்பவரிடம் விவரத்தைக் கூறியுள்ளார்.

இதையடுத்து சித்ரா விஜய் வீட்டில் சென்று பார்த்த போது சமையலறையில் ப்ரியா ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்து. இதுகுறித்து அந்த நபர் விஜயிடம் தகவல் கொடுத்துள்ளார்.

மளிகைக் கடைக்கு வந்த சாரைப்பாம்பு... வெளவெளத்து போன ஓனர்!
இதற்கிடையே தகவல் அறிந்து அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ப்ரியா அணிந்திருந்த சுமார் நாலேகால் பவுன் தங்க நகைகள், காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு காணாமல் போயிருப்பதும், தாடையில் ஆழமான வெட்டுக்காயம் மற்றும் கழுத்து பகுதிகளில் லேசான காயங்களும் இருந்ததும் பதிவு செய்யப்பட்டது.

இது குடும்பப் பிரச்சினையால் ஏற்பட்ட கொலையா அல்லது நகைக்காகச் செய்யப்பட்ட கொலையா என்பது குறித்து அவினாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.

அடுத்த செய்தி