ஆப்நகரம்

பறக்கும்படையிடம் கொத்தாக சிக்கிய 1.15 லட்சம்... யாருக்கு போனது?

வாணியம்பாடியில் 1 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை!

Samayam Tamil 2 Mar 2021, 12:21 pm
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil money


அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரட்டியை ராஜேந்திரன் என்பவர் காரில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி