ஆப்நகரம்

17 வயது சிறுமி சித்தேரி குவாரி நீரில் மாயம்: தேசிய பேரிடர் வேலூர் விரைகிறது!

சகோதர சகோதரிகளுடன் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற மாணவி நீரில் மூழ்கிய நிலையில் மாயமான சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2021, 11:26 pm
வேலூரில் கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவி மாயமாகினார். இதையடுத்து மாணவியை மீட்க ஊர் மக்கள் உள்படப் பலர் மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவியுடன் தேட முடிவு.
Samayam Tamil 17 வயது சிறுமி சித்தேரி குவாரி நீரில் மாயம்: தேசிய பேரிடர் வேலூர் விரைகிறது!


வேலூர் தொரப்பாடி காந்தி தெருவைச் சேர்ந்தவர் நவ்சாத். இவருக்கு 2 பெண், 2 ஆண் என மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் இவரது மூத்த மகள் நசியா(17) உட்பட 4 பிள்ளைகளும் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாடச் சென்றுள்ளனர்.

அப்போது நசியாவும் இவரது சகோதரர்களும் நீரில் இறங்கிக் குளித்துள்ளனர். இதில் நசியாவுக்கு நீச்சல் தெரியாது. எனினும் கல்குவாரி குட்டையில் குளித்துள்ளார். அப்போது நீருக்குள் சென்றவர் வெளியே ஏழுவில்லை.

10 ஆயிரம் லஞ்சத்துக்கு ஆசைப்பட்ட பெண் VAO வின் நிலைமையை பாருங்க மக்களே!
இதைப் பார்த்த அவரது சகோதர, சகோதரிகள் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதியினர் சிறுமியை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால் அரியூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் காவல் துறையினர் வேலூர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கிய நசியாவை தேடினர். எனினும் நசியாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உதவி நாடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி