ஆப்நகரம்

வேலூர்: தண்ணீர் தேடிய மான்கள்... எமனாக மாறிய கிணறு...

ஒடுகத்தூர் அருகே தண்ணீர் தேடி கிராமத்திற்குள் சென்ற 2 மானகள் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 13 Apr 2023, 12:17 pm
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஒடுகத்தூர் வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கிருந்து அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர் தேடி அதிக விலங்குகள் ஊருக்குள் செல்கின்றன.
Samayam Tamil deer file pic
deer file pic


கிணற்றில் விழுந்த மான்கள்

இந்நிலையில், ஒடுகத்தூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வழித் தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் சேர்ப்பாடி கிராமத்தில் புகுந்தது. தண்ணீர் தேடி அலைந்த 2 மான்களும் அங்குள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அடிப்படையில் வந்த ஒடுகத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள் கிணற்றில் இருந்த 2 புள்ளி மான்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
சிவகங்கை: நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை... மாற்றுத்திறனாளிக்கு அதிரடி தண்டனை...
2 மான்கள் உயிரிழப்பு

இதில் ஒரு மான் கிணற்றிலேயே இறந்து விட்டது. மற்றொரு மானை படுகாயமடைங்களுடன் மீட்ட வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மானும் இறந்துவிட்டது.

இறந்த 2 மான்களையும் ஒடுகத்தூர் வனத்துறை வனச்சரகர் இந்து, வனவர் பிரசன்ன குமார் வனக்காப்பாளர் மணிவாசுகி ஆகியோர் பெற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் வனத்துறை அலுவலகத்தில் 2 மான்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி