ஆப்நகரம்

வேலூர் மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 27 May 2022, 11:15 am
வேலூரில் 1915-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகான ஆளுநரால் பென்ட்லேண்ட் மருத்துவமனை (pentland hospital) திறந்து வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதில் இப்போதும் பென்ட்லேண்ட் மருத்துவமனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Samayam Tamil vellore pentland hospital


நவீன மருத்துவமனையாக உள்ள இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிகிச்சைக்காக வேலூர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர்.

12 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் உள்ள இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகளை அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பும் நிலையில் ஏற்பட்டது. இதனால், பல உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளன.
புறா தூதில் மலர்ந்த காதல்… குழந்தையுடன் பரிதவிக்கும் இளம்பெண்!

இதனை கருத்தில் கொண்டு சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மருத்துவமனையை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு ஏழு அடுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை தொடங்கியது. மே 25-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டு திறந்து வைத்தனர். 5 படுக்கைகள் கொண்டு இந்த தீவிர சிகிச்சை பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், 24 மணிநேரமும் மருத்துவர், செவிலியர் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி