ஆப்நகரம்

3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்... எஸ்கேப் ஆன‌ கடத்தல் ஆசாமி!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோதி மங்கலம் பகுதியில் சுமார் 3 டன் எடையுள்ள அரிசியை கடத்திச் செல்லும் பொழுது திருப்பத்தூர் கிராமிய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 14 Jan 2022, 7:42 pm

ஹைலைட்ஸ்:

  • ரேஷன் பொருட்கள் கடத்துவதாக போலீசுக்கு தகவல்
  • வெளிமாநிலங்களுக்கு ‌கடத்துவதாக புகார்
  • 50 மூட்டைகளில் ‌3 டன் அரிசி ‌கடத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை பெங்களூரு, ஆந்திரா குப்பம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு டன் கணக்கில் கடத்திச் செல்வதும் அவ்வப்போது துறை சார்ந்த அதிகாரிகள் பிடிப்பதும் தொடர்கதையாக இருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பத்தூர் அருகே ஜோதி மங்கலம் பகுதியில் திருப்பத்தூர் கிராமிய உதவி காவல் ஆய்வாளர் அகிலன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, பெங்களூர் பதிவு எண் கொண்ட பிக்கப் வாகனத்தில் 50 மூட்டைகளில், சுமார் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதை கண்டு கையும் களவுமாக மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

மிரட்டுறாரு... ஆடிட்டரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம்!

ஆனால்‌, கடத்தல் ஆசாமி தப்பியோடிய நிலையில் பிக்கப் வாகனத்துடன் 3 டன் அரிசியை பறிமுதல் பதிவு செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனிடம் ஒப்படைத்தனர். கடத்தல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி