ஆப்நகரம்

மின் கம்பியை மிதித்த மாடு; பதறியடித்து ஓடிய விவசாயி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து மாடு துடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ஓடி சென்று மாட்டை காப்பாற்ற முயன்றார். இதில் மாடு, விவசாயி இறந்தனர்.

Samayam Tamil 29 Jul 2021, 9:46 am
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவரது மனைவி தேவகி. பெருமாள், மனைவியுடன் மலையம்பட்டு ஏரிக்கரை அருகே வசித்து வந்துள்ளார்.
Samayam Tamil பலியான விவசாயி
பலியான விவசாயி


வழக்கம்போல் விவசாயி பெருமாள் நேற்று ஏரிக்கரை அருகே மாடு மேய்க்கச் சென்றார். அப்போது விவசாய நிலத்தின் வழியில் அறுந்து கிடந்த உயர்மின் கோபுர மின் கம்பியை தெரியாமல் மாடு மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து மாடு துடித்துள்ளது.

அதனைக் கண்ட பெருமாள் மாட்டை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மாடு, விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த களம்பூர் போலீசார் பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்; சாட்டை வீச தயாராகும் அமைச்சர்!

மின்சாரம் பாய்ந்து துடிதுடித்த மாட்டை காப்பாற்ற முயன்றபோது விவசாயியும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி