ஆப்நகரம்

சிறுமியிடம் பாலியல் அத்து மீறல்; தொழிலாளி போக்சோவில் கைது!

வேலூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 31 Jul 2021, 9:38 am
வேலூர் மாநகரில் பெற்றோருடன் வசிக்கும் 11 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். இச்சிறுமி கடந்த 29ம் தேதியன்று மாலை 3 மணி அளவில் தனது வீட்டு வாசலில் அமர்ந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.
Samayam Tamil கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்


அப்போது அந்த வழியாக வந்த மக்கான் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இளங்கோவன் என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரின் தந்தையையும் இளங்கோவன் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் காயம் அடைந்த சிறுமியின் தந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கண் திறந்து பார்த்த அம்மன்?; செல்பிக்கு திரளும் பக்தர்கள்!

புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி