ஆப்நகரம்

திருவண்ணாமலை: கடவுள் போல் காட்சி தரும் பெண் சாமியார்- சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

தன்னை கடவுள் போல் பாவித்து காட்சி தரும் பெண் சாமியார் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 20 Apr 2023, 6:30 pm

ஹைலைட்ஸ்:

  • தன்னை கடவுள் போல் பாவித்து காட்சி தரும் பெண் சாமியார்
  • அவருக்குள் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சந்திரமுகி
  • பெண் சாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Tiruvannamalai
Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் என்ற பெயரில் குடிசை அமைத்து கொண்டு தன்னை கடவுள் போல் பாவித்து அன்னபூரணி அரசு ஒவ்வோரு வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்-நெல்லையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் பேட்டி
அண்ணபூரணி அரசை பார்க்க கூட்டம்
இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அன்னபூரணி அரசை பார்க்க வருகின்றனர்.
முழு மேக்கப்
அன்னபூரணி அரசு ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் ஒவ்வொரு அவதார ரூபங்களில் முழு மேக்கப்புடன் காட்சி தந்து மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாக நம்பி பொதுமக்கள் அவரை காண வருகின்றனர். மேலும் யுடியுப்பில் பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆன்மீக தீட்சை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்தடை
அண்ணபூரணி அரசை தரிசித்து ஆசிர்வாதம் பெறும் மக்களுக்கு தீராத நோய், வாழ்வாதார பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, தீய பழக்கங்களுக்கு அடிமை இப்படிப்பட்ட பல குறைகளில் இருந்து பக்தர்களைக் காத்து வாழ்வை ஆனந்தமாக வாழ வழி செய்தும் வருகிறாராம்.

குடிசை வீடு
கடந்த ஞாயிற்றுகிழமை ராஜாதோப்பு பகுதியில் உள்ள ஆசிரமம் என்ற பெயரில் குடிசை அமைத்து தன்னை கடவுள் போல் பாவித்து நகை அலங்காரத்துடன் கையில் சூலாயுதம் ஏந்தி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பக்தர்கள் பெண் சாமியாரின் காலில் விழுந்து வணங்கி உண்மையான கடவுளுக்கு தீப ஆராதனைகள் செய்வது போல் தீப ஆராதனை செய்து வழிபட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சந்திரமுகி

தன்னை கடவுள் போல் பாவித்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நேரத்தில் பெண் சாமியாரின் உள்ளே இருக்கும் சந்திரமுகி அவ்வப்போது வெளியே வரும் நிகழ்வும் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம்-அன்புமணி ராமதாஸ்
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

நாட்டில் பல்வேறு சாமியார்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் தெரிந்தும் இது போன்ற போலி சாமியார்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி