ஆப்நகரம்

கோட் சூட் போட்டு போட்டோஷூட்; சூப்பர் முதல்வர் இவர்தான்- ஸ்டாலினை தாக்கிய எடப்பாடியார்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் உதயம் ஆவதற்கு காரணம் அண்ணா திமுக அரசே. இது அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 10 Aug 2022, 10:36 am

ஹைலைட்ஸ்:

  • ராணிப்பேட்டை மாவட்டம் உதயம் ஆவதற்கு காரணம் அதிமுக
  • மு.க.ஸ்டாலின் எந்த ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் வழங்கவில்லை
  • பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் இருந்து தர்மபுரி வழியாக சென்னை செல்ல உள்ளார். இவருக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக மாவட்ட கழக செயலாளர்களின் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சாவடி அருகே அதிமுக இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி தலைமையில் பல்வேறு கிராமம் மற்றும் நகர் பகுதியில் இருந்து பல்லாயிரத்துக்கு மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேளதாளம், கும்ப மரியாதையுடன் மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை கொண்டு மிக பிரம்மாண்டமாக அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

திமுகவுடன் கைகோர்த்துள்ள அதிமுக துரோகிகள்- எடப்பாடி கே.பழனிச்சாமி விளாசல்!

இதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செய்ததாக கூறினார். தமிழகத்தில் 14 மாதங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் வழங்கவில்லை. கேஸ் மானியத்திற்கு 100 தரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சஷ்டி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தற்போதைய முதல்வர் எதில் சூப்பர் முதலமைச்சராக இருக்கிறார் என கேள்வி எழுப்பினார். கோட் சூட் போட்டுகொண்டு போட்டோஷூட் எடுத்துக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். தினமும் பத்திரிகைகளில் வரவேண்டும், டிவியில் வரவேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முழுவதுமாக சிதைந்து போயிருக்கிறது. கஞ்சா போதைப் பொருள்களால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதற்கு முழு அடிமையாகி உள்ளார்கள். பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அரசை நம்பி எந்த பலனும் இல்லை என்று குற்றம் சாட்டி பேசினார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி